அவசர புத்தியால் பெரும் நஷ்டம்


 பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்ற பழமொழியைக் கேட்டிருக்கிறீர்களா? பொறுமையாயிருப்பவர்களுக்கு பூமியையே ஆளும் பாக்கியம் உண்மையில் கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் பொறுமை இல்லாதவர்களுக்கு, அதிர்ஷ்டம் வராது என்பது தான்உண்மை!

அரேபிய இரவுகளில் ஒரு கதை உண்டு. கெய்ரோவைச் சேர்ந்த ஓர் இளைஞன் மிகுந்த ஏழையாக இருந்தான். அவனுடைய முன்னோர்கள் செல்வந்தர்களாக இருந்தனர். ஏழைமையில் வாடிய அவன் ஓர் இரவில் ஓர் அதிசயக் கனவு கண்டான். கனவில் ஒரு குரல் “பாக்தாத்துக்குச் செல்! அங்கே உனக்காக அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!” என்றது. மறுநாளே அந்த இளைஞன் பாக்தாத்தை நோக்கிக் கிளம்பி விட்டான். பயணம் செய்து களைத்துப் போனதால், நடுவில் ஒரு மசூதியில் தங்கி ஓய்வெடுத்தான்.

அன்று இரவு, சில கொள்ளைக்காரர்கள் அந்த மசூதியில் தாங்கள் திருடிய பொருட்களுடன் ஒளிந்து கொள்ள, அவர்களைத் துரத்தி வந்த காவலர்கள் மசூதிக்குள் நுழைந்து அவர்களைக் கைது செய்தனர். அவர்களுடன் அந்த இளைஞனும் கைது செய்யப்பட்டான். விசாரணையின் போது அவனைக் குற்றமற்றவன் என்று தெரிந்து கொண்ட காவலர் தலைவன், அவனைப் பற்றிய விவரங்களைக் கேட்டார்.

 இளைஞன் தன்னுடைய கனவை விளக்கினான். அதைக்கேட்டு சிரித்த காவலர், அவனைத் தலைவரிடம் அழைத்துச் சென்றனர். தலைவன், “நான் கூடத்தான் பல ஆண்டுகளாக அப்படிப்பட்ட ஒரு கனவு காண்கிறேன். என் கனவில் வரும் குரல் “உடனே கெய்ரோவிற்குப் போ! அங்கு பனைமரத்தின் கீழ் உள்ள வற்றிய கிணற்றில் ஒரு புதையல் இருக்கிறது” என்று சொல்கிறது. நான் அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் நீ ஒருமுறை கனவு கண்டு, அதை நம்பி விட்டாய்” என்றான்.

அடுத்த நாள் மாலை, இளைஞன் பாக்தாத் நகரை அடைந்தான். நகர்க் காவலன் இளைஞனைக் கண்டு சந்தேகித்து அவனைக் காவல் அதிகாரியிடம் அழைத்துச் சென்றான். அவரிடமும் இளைஞன் தன் கனவைப் பற்றிக் கூற, அவரும் சிரித்துக் கொண்டே “பத்து ஆண்டுகளாக நானும் ஒரு கனவு காண்கிறேன். ஒரு குரல் “கெய்ரோவிற்குச் செல்! அங்கே ஒரு வீட்டில் நான்கு வாயில்களில் மூன்று மூடப்பட்டிருக்கும். வீட்டின் மேற்கு மூலையில் ஒரு பனைமரத்தின் கீழ் வற்றிய கிணற்றினுள் ஒரு புதையல் இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் அதைப் பொருட்படுத்துவதேயில்லை. போசாமல் நீ உன் ஊருக்குச் செல்!” என்றார்.

உடனே அந்த இளைஞன் தன் ஊரான கெய்ரோவை நோக்கி விரைந்தான். அந்த அதிகாரி குறிப்பிட்ட புதையலின் இருப்பிடம் அவனது வீடுதான். அவன், வீட்டை அடைந்து கிணற்றைத் தோண்ட, புதையலும் கிடைத்தது. தன்னிடம் இருந்த புதையலைக் கொண்டு பெரிய பரப்பளவுள்ள நிலம் வாங்குவதில் மும்முரமாக இருந்த அவன், ஒரு வயதானவரை நாடிச் சென்றான்.
தன்னிடமுள்ள பெரிய நிலத்தை விற்க முன் வந்த அந்தப் பெரியவர் இளைஞனிடம், “என்னுடைய முன்னோர்கள் இந்த நிலத்தில் மிக மதிப்பு வாய்ந்த புதையல் இருப்பதாக கூறி வந்தனர். ஆனால் அதை நம்பவில்லை. இனிமேல் புதையல் கிடைத்தும் எனக்கு பயனில்லை. அதனால் இதை உனக்கு விற்கிறேன். அவசரப்பட்டு இதை நீ உடனே விற்று விடாதே” என்றார்.

ஆனால் லாபம் ஈட்டுவதில் குறியாக இருந்த அந்த இளைஞன், நிலத்தின் விலை ஏறியவுடன் அதை நல்ல லாபத்திற்கு விற்றான். அதற்கு அடுத்த ஆண்டே, அந்த நிலத்தில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கொண்டு நடந்த முயற்சியில், வைரச் சுரங்கமே இருப்பது தெரிந்தது. அந்த நிலத்தை விற்ற இளைஞன், தன் அவசர புத்தியை எண்ணி மன உளைச்சலுக்கு ஆளானான், அடுத்த் சில ஆண்டுகளில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு வறுமையின் பிடியில் சிக்கி இறந்தான்.

0 comments:

Post a Comment

Flag Counter