விநாயகர் -22


ஔவையார் ஒருநாள் பழங்கள் நிறைந்த மரங்கள் கொண்ட வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது அழகிய சிறுவன் ஒருவன் ஒரு மரத்தின் மீது அமர்ந்து பாடுவது அவருக்குக் கேட்டது. அம்மரத்தில் பழுத்த பழங்கள் ஏராளமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.

அவர் அச்சிறுவனிடம் "சிறுவனே! ஒரு பழம் பறித்து எனக்குப் போடுகிறாயா?" என்று கேட்டார். சிறு வனும் சிரித்தவாறே "பாட்டி! எந்த மாதிரிப் பழம் வேண்டும்? உன் முதுமையைப் போக்கும் பழமா? மரணத்தை வெல்லும் பழமா? செல்வத்தைக் கொடுக்கும் பழமா? ஞானப் பழமா?" என்று கேட்டான்.

அப்போது ஔவையாருக்கு அந்தச் சிறுவன் முருகக் கடவுளே என்று தெரிந்துவிட்டது. அவர் அவனைக் கைகூப்பி வணங்கி "முருகா! ஞான பண்டிதா! எனக்கு ஞானப்பழத்தையே அளி!" என வேண்டினார்.

சிறுவன் மறுவிநாடியே குமரக் கடவுளாக மாறினான். மயில் வாகனத்தோடு காட்சியளித்த கந்தனை ஔவை வணங்க முருகபிரானும் தம் கையால் அவரது தலையைத் தொட்டார். அப்போது ஔவைக்கு ஓங்காரப் பிரணவத்தின் தத்துவமும் பிரம்மஞானமும் முக்திக்கான மார்க்கமும் தெளிவாகத் தெரிந்தது.

முருகபிரான் தம் ஆசிகளை அவருக்கு அளித்துவிட்டு உடனேயே மாயமானார். எனவே தம் அறிவுரைகளை ஆத்திச்சூடி, மூதுரை போன்ற செய்யுள்களாகக் கூறினார் ஒளவையார். அவர் கூறிய எளிய சொற்கள் எல்லோருக்கும் புரிந்தன. அவை என்றென்றும் நிலைத்தும் விட்டன.
 ஔவையார் ஊர்ஊராகப் சென்றார். ஒருநாள் இருட்டும் வேளைக்கு ஒரு காட்டு வழியே சென்று கொண்டிருந்தார். வானத்தில் கருமேகங்கள் சூழ, மின்னல் அவ்வப்போது வெட்டிக் கொண்டிருந்தது. மழை வேறு பெய்ய ஆரம்பித்தது. ஔவையார் கால் இடறிக் கீழே விழுந்துவிட்டார். அவரது ஊன்றுகோல் அவர் விழுந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் போய் விழுந்தது.

அப்போது யாரோ நடந்து வரும் காலடி சத்தம் அவருக்குக் கேட்டது. அவர் மின்னல் வெளிச்சம் ஆன போது தலை நிமிர்ந்து பார்த்தார். அழகாய், பருமனாய் தொந்தியும் தொப்பையுமாக உள்ள ஒரு சிறுவனை அவர் கண்டார். அவன் ஔவையாரைக் கை பிடித்துத் தூக்கி நிறுத்தி அவரது ஊன்றுகோலையும் எடுத்துக் கொடுத்தான்.

ஔவையார் ஊன்றுகோலின் உதவியால் நின்று அந்தச் சிறுவனைப் பலமாகப் பற்றிக் கொண்டார். அவனும் "பாட்டி! நீ எங்கே போகிறாய்?" என்றுகேட்டான். ஔவையும் "எங்கே என்று சொல்வது? இந்த உலகில் எல்லா ஊரும் என் ஊர் தான். ஆனால் நான் அடைய விரும்பும் ஊர் இந்த உலகில் இல்லை. அதற்கு என்ன வழி என்றுதான் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆமாம், நீ யார்? ஜன நடமாட்டம் இல்லாத இந்தக் காட்டில் இருட்டில் வந்திருக்கிறாயே!" என்று கேட்டார்.

அவனும் "ஔவையே! நான் உன் சிறுவயதிலிருந்து உன் நண்பனாக இருந்து வருகிறேன். காடு, இருட்டு என்றெல்லாம் கவலைப்படாதவன். நீ ஏதோ ஊருக்குப் போய்ச் சேர வேண்டும் என்றாயே, அதன் பெயரைச் சொல்லவில்லையே!" என்று கேட்டான். ஔவையாரும் "உன்னிடம் சொன்னால் என்னை அங்கே அழைத்துச் செல்லவா போகிறாய்? அதுதான் சிவனாரின் இருப்பிடமாகிய கைலாசம்," என்றார்.

அதுகேட்டு சிறுவனும் "பூ! இதுதானா? உன் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அங்கே போகி றேன்," என்று கூறி ஔவையாரின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கலானான்.

 ஔவையார் இரண்டடி எடுத்து வைத்ததுமே ‘பளிச்’சென மின்னல் மின்னியது. அப்போது துதிக்கையால் விநாயகர் தன்னைப் பிடித்து நடத்திக் கொண்டு போவதை அவர் கண்டார். உடனே அவர் "விநாயகா! எனக்கு சிறுவயது முதல் நீதான் வழிகாட்டி!" எனக் கூறித் துதித்தார். விநாயகரோ அவரைப் படிப்படியாக ஏற வைத்து முடிவில் "ஔவையே! இதோ கைலாசத்தை அடைந்து விட்டாய்!" என்றார். ஔவையாரும் கண்ணைத் திறந்து பார்த்தார்.

ஒரே ஒளிமயமான இடம் அது. அதன் கீழே வெகுதூரத்தில் பல நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. பல சூரியர்களும், வால் நட்சத்திரங்களும், வாயு உருவில் சுற்றி வந்து எரியும் ஜோதிகளும் தெரிந்தன.

விநாயகர் ஔவையின் கைகளை விட்டுவிட்டு "ஔவையே! நீ கைலாசம் வந்துவிட்டாய். இங்கு காலம் என்பதும் அழிவு என்பதும் இல்லை. இது சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட சிவசன்னிதானம். அகிலாண்டகோடி நாயகரான சிவனாரை நீ எப்போதும் தரிசித்துக் கொண்டே இருக்கலாம்," எனக் கூறி மறைந்தார்.

ஔவையார் லிங்க வடிவில் எங்கும் பரவியுள்ள ஜோதி வடிவைக் கண்டார். அதில் சிவகணங்களும், நந்திதேவரும், பார்வதி தேவியும், குமரக் கடவுளும், விநாயகரும், சிவனாரும் இருப்பதை அவர் கண்டு களித்தார். சிவனாரும் தன் அபயக் கரம் அளித்து ஔவையாரைத் தன் ஜோதியில் சேர்த்துக் கொண்டார்.

மண்டபத்தில் கரும்பை பற்றிய விநாயகரை ஒரு குடியானவன் கண்டு கொண்டிருக்கும் சிற்பத்தைப் பார்த்து பாவனமிசிரர் அதை விவரிக்கும் கதையைக் கூறலானார்.

மிகப்பெரிய பண்ணையார் ஒருவர் விநாயக பக்தர். அவர் விநாயகருக்குப் பூஜை, திருவிழா எனப் பிரமாதமாகக் கொண்டாடி வந்தார். அவருக்குப் பல நெல் வயல்களும் கரும்புத் தோட்டங்களும் இருந்தன. இந்த வயல்களின் விளைச்சல்களை அமோகமாக்கிக் கொண்டிருந்தவன் அவரிடம் வேலை செய்த முனியன் என்பவன். அவன் பண்ணையாரைப் போல ஆர்ப்பாட்டத்துடன் விநாய கரை வழிபடாவிட்டாலும் மனதிலேயே தியானித்து வந்தான். வருடாவருடம் பயிர் செய்யும்போது விநாயகரைத் தொழுத பிறகே வயலில் வேலை செய்ய இறங்குவான்.
 முனியனுக்கு மனைவியும், மகன் ஒருவனும் இருந்தனர். அவர்கள் இருவரும் வயல்களில் முனியனுக்கு உதவியாக வேலை செய்து வந்தார்கள். ஆனால் அவர்களுக்குப் பண்ணையார் குறைந்த கூலியே கொடுத்து வந்தார்.

பண்ணையாரின் மனைவியோ தாராளமனம் படைத்தவள். அவள் தன் கணவரிடம் முனியனுக்கும் அவன் குடும்பத்தவருக்கும் கொடுக்கும் கூலி மிகக் குறைவு என்றும் அது அநியாயம் என்றும் கூறிப் பார்த்தாள்.
அவரோ, "இப்படி பணத்தை அள்ளிக் கொடுத்துவிட்டால் விநாயகருக்குப் பூஜையும் விழாவும் எப்படி செய்ய முடியும்? இந்த மாதிரி மீதம் பிடித்துத்தான் இந்தப் பூஜை எல்லாம் செய்ய முடியும்," என்றார்.

அதற்கு அவர் மனைவி "இப்படி ஏழைகளின் வயிற்றில் அடித்த காசில் பூஜை ஏன் செய்ய வேண்டும்?" எனக் கூறி "விநாயகா! நீதான் இவருக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்," என்று வேண்டிக் கொள்வாள்.

அந்த வருடம் கரும்பு நன்கு விளைந்தது. முனியனும் அவனது குடும்பத்தினரும் கரும்பை வெட்டி சாளையில் கொண்டுபோய் போட்டனர். முனியனின் மகன் ஆசையாக ஒரு கரும்பை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்குக் கிளம்பினான்.

இந்தச் சிறுவனும் விநாயக பக்தனே. பண்ணையார் நடத்தும் பூஜைகளுக்கும் விழாக்களுக்கும் பக்தி சிரத்தையுடன் மலர்களைச் சேகரித்துக் கொண்டு வருவான். அவன் ஒரு கரும்போடு செல்வதைப் பண்ணையார் கவனித்துவிட்டார். அவனைக் கூப்பிட்டு அவர் "இதென்னடா கொள்ளை? இப்படித்தான் தினமும் கொண்டு போகிறாயா?" என்று அதட்டிக் கேட்டார்.

அச்சிறுவனும் "இல்லை. நாளை விநாயக சதுர்த்தி. எங்கள் வீட்டிலும் விநாயகரை வைத்துப் பூசிக்கலாம் என்று இதை எடுத்துச் செல்கிறேன்," என்று பணிவுடன் சொன்னான்.

அதுகேட்டு அவர் "டேய், என்ன திமிர் உனக்கு? உயர் குலத்தவராக நாங்கள் பூஜை செய்வதுபோல நீயும் பூஜை செய்ய ஆசைப்படுகிறாயா?" என்று கூறி அவனைச் சாட்டையால் சுளீர்சுளீரெனப் பல அடிகள் அடித்து விட்டார். அவரது செயலை யாரும் தடுக்க முன்வரவில்லை.

ஏனெனில் அவரது பணபலம் மற்ற வேலைக்காரர்களை ஊமையாக்கிவிட்டது. முனியனோ தன் மகன் அடி தாங்க முடியாமல் துடிப்பது கண்டு "ஐயா! கடவுளைத் தொழ குலம், மதம் என்றெல்லாம் வேறுபாடு இல்லையே. எல்லோருக்கும் கடவுளிடம் பக்தி கொண்டு பூஜை செய்ய உரிமை உண்டல்லவா?" என்று பண்ணையாரிடம் பணிவோடு கூறினான்.

அதைக் கேட்ட பண்ணையார் எரிந்து விழுந்து "உன் லட்சணத்திற்கு பக்தி ஒரு கேடா? நீ பெரிய பக்தனோ? என்னைவிட விநாயக பக்தியில் உயர்ந்தவனோ?" என்று சவால் விட்டார். முனியனும் "உங்களை விட அதிக பக்தி உள்ளவன் என்பது எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நானும் என் குடும்பத்தவரும் விநாயக பக்தி பூண்டவர்கள்," என்றான்.

 அப்போது பண்ணையார் ஏளனமாக "அடே பக்தனே! இன்று இரவிற்குள் இந்தக் கரும்புகள்  எல்லாவற்றையும் சாப்பிட்டு அதன் சக்கையைத் துப்பிக் குவித்துவிட வேண்டும். அப்போதுதான் உன் பக்தி உண்மையானது என நான் நம்புவேன். இப்படிச் செய்யாவிட்டால் உனக்கு நூறு கசையடி கொடுப்பேன்," எனக் கூறிவிட்டு அவனை அந்த சாளையிலேயே இருக்கச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
ஏனெனில் அவரது பணபலம் மற்ற வேலைக்காரர்களை ஊமையாக்கிவிட்டது. முனியனோ தன் மகன் அடி தாங்க முடியாமல் துடிப்பது கண்டு "ஐயா! கடவுளைத் தொழ குலம், மதம் என்றெல்லாம் வேறுபாடு இல்லையே. எல்லோருக்கும் கடவுளிடம் பக்தி கொண்டு பூஜை செய்ய உரிமை உண்டல்லவா?" என்று பண்ணையாரிடம் பணிவோடு கூறினான்.

அதைக் கேட்ட பண்ணையார் எரிந்து விழுந்து "உன் லட்சணத்திற்கு பக்தி ஒரு கேடா? நீ பெரிய பக்தனோ? என்னைவிட விநாயக பக்தியில் உயர்ந்தவனோ?" என்று சவால் விட்டார். முனியனும் "உங்களை விட அதிக பக்தி உள்ளவன் என்பது எல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நானும் என் குடும்பத்தவரும் விநாயக பக்தி பூண்டவர்கள்," என்றான்.
முனியனுக்கும் அவ்வளவு கரும்பையும் எப்படி ஒரே இரவில் சாப்பிடுவது எனத் தெரியவில்லை. அவன் விநாயகரை தியானம் செய்தவாறே அந்த சாளையிலேயே படுத்துத் தூங்கிவிட்டான்.

விடிந்ததும் பண்ணையார் முனியன் இருந்த சாளைக்கு வந்தார். அங்கு அவர் ஓரிடத்தில் கரும்புச் சக்கை மலையாகக் குவிந்து கிடப்பதையும் ஒரு கரும்புகூட மீதம் இல்லாமல் இருப்பதையும் கண்டு திகைத்துப் போய் ஆவென கத்தினார்.

அப்போது அவர் தன்னோடு வந்த தன் மனைவியிடம் "ஐயோ! இந்த வருடக் கரும்புப் பயிர் எல்லாம் இப்படிப் பாழாகிவிட்டதே! ஒரு கரும்புத் துண்டு கூட இல்லையே. இவ்வளவையும் சாப்பிட்ட இந்த முனியன் மனிதன்தானா அல்லது பூதமா?" என்று ஆத்திரத்தோடு கேட்டார்.

அவரது மனைவியோ அமைதியாக "நேற்றிரவு நான் நம் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தேன். இங்கே பெரிய யானை ஒன்று வந்து புகுந்து இந்தக் கரும்பை எல்லாம் சாப்பிட்டுச் சக்கையைத் துப்பிக் குவித்துக் கொண்டிருந்தது. முனியன் விநாயக பக்தன். அவர் அவனைக் கைவிடவில்லை. எல்லாம் சாப்பிட்டு முடித்தபின் அது மாயமாய் மறைந்து போயிற்று. அப்படி வந்தவர் விநாயகராகத்தான் இருக்க வேண்டும்," என்றாள்.

பண்ணையாரோ, "இதென்ன! யானையாவது, வந்து எல்லாம் சாப்பிடுவதாவது! நம்ப முடியவில் லையே. முனியன் அவ்வளவு பெரிய பக்தனா?" என்று கூறிக் கொண்டிருக்கும்போதே அவரது சில வேலையாட்கள் ஓடி வந்து "ஐயா! நேற்றிரவு பந்தல் போட்டு இன்று பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயக விக்கிரகம் காணவில்லை," என்றனர்.
பிறகு அவர்கள் சாளையைப் பார்த்தவாறே "இதோ! இங்கே இருக்கிறதே!" என ஆச்சரியத்துடன் கூவினார்கள்.                                                                                                                                                                         



 

 

0 comments:

Post a Comment

Flag Counter