கல்வி கற்றால் மட்டும் போதாது

கற்க கசடறக் கற்றவை கற்றபின்
                                    நிற்க அதற்குத் தக



விளக்கம்: பள்ளியில் முறையாக கற்றுக் கொள்வது பெரிதல்ல. தான் கற்று அறிந்து கொண்டதற்கேற்ப வாழ்க்கையிலும் நடந்து காட்ட வேண்டும்.

  வகுப்பு ஆசிரியர் கனகரத்தினம் அன்று மாணவர்களுக்கு அறநெறிக் கருத்துக்களைப் பற்றி விளக்கமளித்துக் கொண்டிருந்தார். பசியென்று ஒருவன் நம்மை நாடி ஒருவன் வந்தால், நம்மால் இயன்றதை அவனுக்குக் கொடுத்து அவனைப் பசியாறச் செய்ய வேண்டியது நமது கடமை என்பதையும், விருந்தோம்புதல், என்பது தமிழர்களின் உயரிய பண்பாடுகளில் ஒன்று என்பதையும் விளக்கிக் கூறினார். பின்னர் தமிழகத்தில் வாழ்ந்து வந்த வள்ளல்களைப் பற்றி குறிப்பிட்ட அவர், முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி வள்ளலின் கதையையும் மாணவர்கள் மனதில் பதியுமாறு எடுத்துரைத்தார்.

அதற்குப் பின் மதிய உணவுக்காக வகுப்பு கலைந்தது. நாகராஜன் என்ற மாணவன் தனவந்தர் வீட்டுச் சிறுவன். தான் மதிய உணவுக்காக கொண்டு வந்த இன்சுவை உணவுகளை உண்டும் நிறைவு பெறாமல், பள்ளியின் வெளியே இருக்கும் இனிப்புக் கடையை நோக்கிச் சென்று சில உணவுப் பொருட்களை வாங்கிச் சுவைத்தான்.

அப்போது ஒரு ஏழைச் சிறுவன், நாகராஜன் உண்பதையே பார்த்துக்கொண்டிருந்தான்.சில நிமிடங்கள் கழித்து, "அண்ணா, பசியாக இருக்கிறது" என கெஞ்சினான். உடனேநாகராஜன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டு உண்பதைத் தொடர்ந்தான்.


அப்போதுஎதிர்பாராமல் அங்கு வந்த அவனது வகுப்பு ஆசிரியர், நாகராஜனைக் கூப்பிட்டு"உன் செய்கைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். இன்று நீ வகுப்பில்என்ன கற்றுக் கொண்டாய், பசியென்று வந்தவர்களுக்கு உணவிடுவது தான் நம்தலையாய கடமை என்பதை நீ கற்கவில்லையா? பசியால் வந்து உன்னைக் கெஞ்சியவனைஉதாசினப்படுத்தும் போது, அவன் மனம் என்ன பாடுபடும் என்பதை அறிவாயா?பள்ளியில் கல்வி கற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது. கற்ற வழியில்நடக்க வேண்டும்" என்றார்.

தன் செயலை எண்ணி வருந்திய நாகராஜன், கடையிலிருந்து வேறு தின்பண்டம் வாங்கி அந்தச் சிறுவனுக்கு அளித்து மகிழ்ந்தான்.

0 comments:

Post a Comment

Flag Counter