சுவர் அலங்காரம் செய்யலாம் வாங்க!

ணாகப் போகும் ஐஸ்கிரீம் குச்சிகளை வைத்து அழகிய, அலங்காரமான சுவரொட்டிகளைச் செய்து உங்கள் வீட்டை அழகுபடுத்துங்கள்.
 

தேவையான பொருட்கள்:
  1. ஐஸ்கிரீம் குச்சிகள் -12
  2. வண்ணக் காகிதம்
  3. பிளாஸ்டிக் பூக்கள் (கடைகளில் கிடைக்கும்) -3
  4. நூல், பசை









நான்கு ஐஸ்கிரீம் குச்சிகளை எடுத்துக் கொண்டு, அவற்றின் முனைகளை பசை கொண்டு ஒட்டி, படத்தில் உள்ளது போல சதுர படிவ ஃபிரேம் உருவாக்குங்கள்.








அதன் உள்புறம் குச்சிகளின் அளவுக்கு ஏற்றாற்போல சதுர அளவாக வண்ணக் காகிதத்தை ஒட்டுங்கள். இதே போல ஐஸ் குச்சிகள் மற்றும்  வண்ணக் காகிதங்களைக் கொண்டு மேலும் இரண்டு சதுரங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.




இப்போது மூன்று பிளாஸ்டிக் பூக்களை எடுத்துக் கொண்டு, பசை தடவி ஒவ்வொரு சதுரத்திலும் ஒரு பூவை ஒட்டி விடுங்கள். பார்ப்பதற்கு அலங்கரிக்கப்பட்ட புகைப்பட ஆல்பம் போல காட்சியளிக்கும். பூக்கள் தான் என்றில்லை. உங்களுக்குப் பிடித்த தட்டை வடிவ பொம்மைகள், சிறிய ஓவியங்கள் என எதை வேண்டுமானாலும் ஒட்டலாம். இதற்கு ஏற்றவாறு பின்புற காகிதத்தின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

மூன்று சதுரங்களையும், படத்தில் உள்ளது போன்று ஒன்றன் கீழ் ஒன்றாக பசை தடவி ஒட்டுங்கள். மேற்பகுதியிலுள்ள சதுரத்தில் கம்பளி நூலினை இணைத்து கட்டுங்கள்.

அழகிய இந்த அலங்கார சுவரொட்டி தயார், வீட்டில் மாட்டி அனைவரையும் அசத்துங்கள்!

0 comments:

Post a Comment

Flag Counter