சுந்தரகாண்டம் 7

 
இலங்கையை இராவணன் இட்ட தீயாலேயே எத்து அழித்த அனுமார் மீண்டும் அசோக வனத்திற்குச் சென்றார். அங்கு சீதாபிராட்டியைக் கண்டு வணங்கி "இனி நான் விரைந்து சென்று இராமடம் தகவல் சொல்கிறேன். அவரும் இங்கு படையோடு வந்து உங்களை மீட்டுச் செல்வார்" எனக் கூறினான்.


பின்னர் அவர் சீதையை வணங்கி விடைப்பெற்றுக் கொண்டு அஷ்டம் என்னும் மலைமீது ஏறினார். தன் உடலைப் பெதாக்கிக் கொண்டு உயரக் கிளம்பினார். மேகங்கள் இடையே புகுந்து மறைந்து காற்றிலே சஞ்சத்துக் கொண்டே மகேந்திரபர்வதம் இருக்கும் இடத்தை அவர் விரைவிலேயே வந்தடைந்தார்.
அம்மலையைக் கண்டதும் அவர் சந்தோஷத்தால் ஆர்ப்பக்க அங்கு அனுமான் வரவை எதிர் பார்த்து இருந்த வானரர்கள் மிகவும் மகிழ்ந்தனர். ஜாம்பவானே "அனுமார் எந்த வேலையையும் திறன்பட செய்து டித்து விட்டே வருவார் என்று எனக்கு அசைக்க டியாத நிம்பிக்கை உண்டு" என்றார்.
வானரர்கள் அருகே இருந்த மரங்களின் மீதேறி சந்தோஷத்தால் கூச்சலிட்டு அனுமாரை வரவேற்கலாயினர். அனுமாரும் மகேந்திர பர்வதத்தை நோக்கி இறங்கி வந்தார். அவரை எல்லா  வானரர்களும் மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.

அனுமார் அங்குள்ள தியோர்களையெல்லாம் வணங்கியவாறே "கண்டேன் சீதையை" என இரத்தினச் சுருக்கமாகக் கூறி அவர்களது ஆவலைத் தணித்தார்.

 அதைக் கேட்டு யாவரும் ஆனந்தக் கூத்தாடினர். இதற்கு இடையில் ஜாம்பவான் "அனுமாரே, நீங்கள் சீதையை எங்கே கண்டீர்கள்? தேவியார் எப்படி இருக்கிறார்? அவரோடு நீங்கள் என்ன பேசினீர்கள்? இராவணன் அவரைத் துன்புறுத்தவில்லையே? உங்கள் பிரயாணம் சுகமாக டிந்ததா? உங்களுக்கும் அரக்கர்களால் எவ்விதத் தொந்தரவும் ஏற்படவில்லையே" எனப் பலவிதமான கேள்விகளைக் ஒரே ச்சில் கேட்டார்.


இதற்குள் அங்கதன் எல்லாரையும் அமைதியாக உட்கார வைத்து எல்லாவற்றையும் விவவரமாகக் கூறும்படி அனமாடம் வேண்டிக் கொண்டான். அனுமாரும் தன் அனுபவத்தைக் கூறலானர்.
"நான் கிளம்பிச் சென்றதை நீங்கள் கண்டீர்களல்லவா? சிறிது தூரம் போனதும் கடலின் நிடுவிலே தங்கச் சிகரம் கொண்டுள்ள மலை ஒன்றைக் கண்டேன். அதன் பெயர் மைனாகம். அதனை ஒரு காலத்தில் என் தந்தையான வாயுதேவர் இந்திரனிடமிருந்து காப்பாற்றினாராம். அதனோடு பேசி அங்கு சற்று இளைப்பாறிவிட்டுக் கிளம்பினேன். பின்னர் ஒரு பெய கடல்ஜந்துவின் வாயில் புகுந்து வெளி வந்து அதனை வென்றேன். சர்ப்பங்களுக்கு எல்லாம் அந்த கடல் ஜந்து தாயாகும்.


"அதன் பிறகு இலங்கையை அடைந்தேன். இருட்டும் வேளை, அங்க காவல் புந்த இலங்கிணியை நான் வென்று சீதா தேவியை இலங்காபு ழுவதும் தேடிப்பார்த்தேன். டிவில் அசோக வனத்தில் கண்டேன். சீதை மகாபதிவிரதை. இராவணனால் சீதாதேவியை அணுகக்கூட டியவில்லை. இராமரைக் கண்டாலே சீதா தேவியின் மனம் ஆறுதல் பெறும். அவரையே பிராட்டியார் அல்லும் பகலுமாக எண்ணி எண்ணி ஏங்குகிறார்.


"என்னை இரவணன் பிடித்து வாலில் தீயிட்டான். அந்த நெருப்பைக் கொண்டே நான் இலங்கையைக் கொளுத்தி விட்டேன். நாம் எல்லாருமாகச் சேர்ந்து இராவணனை றியடித்துவிட டியும். இப்போதே போய் இரவணனைக் கொன்று சீதையை இராமடம் ஒப்படைத்துவிடக் கூட டியும்" என்று அனுமார் தான் சென்று வந்ததை விவரமாகக் கூறினார்.
 இவ்வாறு அனுமார் கூறியதைக் கேட்டு அங்கதன் "சீதா தேவியைக் கண்டோம் என்று கூறுவதை விட இராமடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதே மேல். மேலும் அனுமார் பல அரக்கர்களை அழித்து விட்டார்.  எனவே இராவணனை இப்போதே வெல்வது நிமக்கு மிகச் சுலபமே" என்றான்.

அதுகேட்டு ஜாம்பவான் "இளவரசே, இது நில்லதுதான். ஆனால் இது பற்றி இராமன் அபிப்பிராயம் நிமக்குத் தெயாதே. எனவே அவடம் சொல்லி அதன் பிறகு அவர் கூறுவதுபோல நிடப்போம்" என்றார். மற்றவர்களும் அதுதான் சயெனக் கூறினர்.


எல்லா வானரங்களும் உடனே கிஷ்கிந்தையை நோக்கிச் சென்றனர். ஒரே குதூகலம், குதிப்பு, களியாட்டத்தோடு அவர்கள் மதுவனத்தில் நுழைந்தனர். மதுவனத்தில் அதிபன் ததிகன், சுக்கிநூவனின் தாய்மாமன், வானரர்கள் தன் வனத்தையே அழிப்பதைக் கண்டு அவன் அவர்களை எல்லாம் அங்கிருந்து செல்லும்படிக் கூறினான். ஆனால் அந்த வானரங்கள் அவன் பேச்சைச் சிறிது கூட கேட்கவில்லை.

அவர்களது செய்கைக்கு அங்கதன் உற்சாகட்டினான். அனுமாரும் அங்கீகத்தார். அதனால் வானரர்கள் தம் இஷ்டப்பட்டபடி பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். தேனைப் பருகினார்கள். வனத்தின் காவலாளிகளைக் கட்டிப் போட்டார்கள். மரங்கள் செடிகள், எல்லாம் நாசமாகின. இதையெல்லாம் ததிகன் பார்த்த பிறகு தன் ஆட்களைத் திரட்டிக்கொண்டு வந்து கற்களால் வானரங்களைத் தாக்கலானான். ஆனால் அங்கதனோ தேனை நறைய குடித்துவிட்டு மதி இழந்து கிடந்தான். ததிகன் தன் தாத்தா என்பதைக் கூட மறந்து அவனைக் குத்திக் கீழே வீழ்த்தினான். அவன் மயக்கற்று விழுந்து விட்டான்.
சற்று நேரத்திற்குப் பின் அவன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தன் ஆட்களைப் பார்த்து "இவர்களை இப்படியே விட்டு விடுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.

 நான் சுக்கிநூவனிடம் போய் இவர்களது அத்துமீறிய செய்கைகளைக் கூறுகிறேன். அவனே இவர்களை தண்டிக்கட்டும்" எனக்கூறி அங்கிருந்து  சென்றான்.


தன் தாய்மாமனைக் கண்ட சுக்கிநூவன் "ஏது இவ்வளவு அவசர அவசரமாக வருகிறீர்களே. என்ன விசேஷம்?" என்று கேட்டான். அதற்கு ததிகன் "இன்றுவரை என் மதுவனத்தில் யாருமே என் உத்திரவு இல்லாமல் நுழைந்ததில்லை. இப்போது அங்கதன் பல வானரர்களோடு வந்து அதனை நாசப்படுத்திக் கொண்டு இருக்கிறான். அவர்களை அங்கிருந்து போகவும் சொன்னேன். ஆனால் ஏனோ என் பேச்சை அவர்கள் கேட்கவில்லை" என்றான்.

அதைக் கேட்ட சுக்கிநூவன் "ஓகோ! தென்திசையை நோக்கிச் சென்ற அனுமான் அங்கதன் தலானோர் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்கள் சீதாதேவியைக் கண்டு பிடித்திருக்கவேண்டும். அதனால்தான் இப்படிஎல்லாம் தலைகால் புயாது ஆடுகிறார்கள்" என்றான்.
இதைக் கேட்டு இராமரும் இலட்சுமணரும் ஆனந்தம் அடைந்தனர். சக்கிநூவன் ததிகனிடம் "அவர்கள் செய்தது ரொம்ப சயென்றும் அவர்களது வரவை இராமரும் இலட்சுமணரும் நானும் ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பதாகக் கூறுங்கள். அவர்கள் உடனே அங்கிருந்து கிளம்பி விடுவார்கள், உங்கள் வனம் மேலும் நாசமடையாது இருக்கும்" என்று கூறி அனுப்பினான்.


ததிகனும் இராமரையும் இலட்சுமணனையும் வணங்கிவிட்டு சுக்கிநூவனிடம் விடை பெற்றுக் கொண்டு ஆகாய வழியாக மதுவனத்திற்கு விரைவில் போய்ச் சேர்ந்தான். இதற்குள் வானரர்களின் ஆர்ப்பாட்டம் சற்று அடங்கி இருந்தது.
ததிகன் அங்கதனிடம் "நான் சுக்கிநூவனிடம் நீங்கள் எல்லாம் இங்கு வந்திருப்பதைப் பற்றிக் கூறினேன். அவனும் இராமர்,  இலட்சுமணர் இருவரும் உங்களது வருகையை ஒவ்வொரு வினாடியும் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். உங்களையெல்லாம் உடனே வரச்சொல்லும்படி சுக்கிநூவன் தகவல் சொல்லி அனுப்பி இருக்கிறான்" என்றான்.
அப்போது அங்கதன் "ஆமாம் இனி நாம் எங்குமே தங்காமல் நேராக கிஷ்கிந்தைக்குச் செல்வோம். நாம் வருவதுதான் ன்கூட்டியே அவர்களுக்குத் தெந்து விட்டதே" என்றான்.
உடனே எல்லாரும் சற்றும் தாமதிக்காமல் விரைந்து செல்லலாயினர். அங்கதன் தலானோர் ஆகாயத்தில் கிளம்பிச் சென்றனர்.


அவர்கள் அனைவரும் கிஷ்கிந்தைக்குள் நுழைந்து ஆர்ப்பத்தவாறே சென்றனர். இந்த சத்தத்தைக் கேட்ட சுக்கிநூவன் மிகவும் சந்தோஷப்பட்டவனாக "அதோ வந்து விட்டார்கள். அவர்கள் நிற்செய்தியே கொண்டு வருகிறார்கள்" என இராமடம் இலட்சுமணனிடம் கூறினான்.

இதே சமயம் அங்கதனும் அனுமாரும் இராமரும் இலட்சுமணனும் இருக்கும் இடத்தை அடைந்தனர். அப்போது இராமர் அனுமாரையும் அங்கதனையும் பார்த்து "சீதையைப் பற்றி ஏதாவது தகவல் கிடைத்ததா?" என ஆவல் உடன் அனுமாடம் கேட்டார்.

அப்போது அனுமார் ன் வந்து "கண்டேன் சீதையை" எனக்கூறி சீதை கொடுத்த சூடாமணியை எடுத்து இராமடம் கொடுத்தார். பின்னர் "நீங்கள் இருவரும் சித்திரகூடத்தில் இருந்தபோது ஒரு காகம் செய்த கோரச்செயலையும் என்னிடம் கூறினார்.

 
இன்னும் ஒரு மாத காலம் இராவணன் சீதைக்கு அவகாசம் கொடுத்திருக்கிறான்" எனக்கூறி தேவியான் நலையை அவர் விவரமாகக் கூறினார். அத்துடன் அவர் நறுத்திக் கொள்ளாமல் இனி அவர் சென்று சீதையை மீட்பதொன்றே வழி என்பதையும் இராமடம் எடுத்துக் கூறினார்.
சூடாமணியைக் கண்டு இராமர் கண்ணீர் வடித்தார். இலட்சுமணனின் துயரத்திற்கும் எல்லையே இல்லை. இராமரோ ‘சூடாமணியோடு பார்த்த சீதையை மீண்டும் காணவே என் மனம் துடிக்கிறது. இன்னும் ஒரு மாதக் காலம் சீதை உயிரோடு இருப்பாளா? அதற்குள் இலங்கைக்குப் போய் விடுவோமா? இனி நான் ஒரு வினாடிகூடத் தாமதிக்க மாட்டேன். அங்கு உள்ள கோர அரக்கிகளின் மத்தியில் அகப்பட்டு சீதை என்ன பாடுபடுகிறாளோ?’ என்று எண்ணி வருத்தப்படலானார்.

அனுமாரும் சீதை சொல்லி அனுப்பியதை எல்லாம் இராமடம் ஒன்று கூடவிடாமல் கூறினார். இராமரும் யாவற்றையும் கவனமாகக் கேட்கலானார். டிவில் அனுமார் "நீங்கள் சென்று இராவணனைக் கொன்று தன்னைச் சிறை மீட்கவேண்டுமென்று சீதாதேவியார் விரும்புகிறார். அதற்காக ஆவனவற்றை எல்லாம் செய்யும்படி என்னையும் அவர் கேட்டுக்கொண்டு இருக்கிறார்.

"நானும் தேவியாருக்கு ஆறுதல் மொழிகளைக் கூறிவிட்டு வந்து இருக்கிறேன். என்னைவிடப் பராக்கிரமசாலிகளான பலர் சுக்கிநூவனிடம் இருக்கிறார்கள் என்பதை எடுத்துக்கூறி அவருக்கு நிம்பிக்கையூட்டி வந்திருக்கிறேன். எனவே நீங்கள் இலங்கைக்கு வந்து இராவணனை அவனது வம்சத்தோடு அழித்து விட்டு தம்மை மீட்டுச் செல்வீர்கள் என சீதாதேவியார் ழு நிம்பிக்கை கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.
இராமரும் அனுமார் கூறியதை எல்லாம் மிகக் கவனமாகக் கேட்டுக்கொண்டே வந்தார். இனி சீதையை மீட்க வேண்டியது தானே வேலை.


                                        (சுந்தரகாண்டம் முற்றியது)

 

0 comments:

Post a Comment

Flag Counter