
இராமர் தன் சபையில் வீற்று இருக்கையில் வெளி வாசலில் ஒரு நாய் நன்று பலமாகக் குரைத்தது. அது கண்டு இலட்சுமணன் அது ஏதோ சொல்ல விரும்புவதாக எண்ணினான். இராமரும் அவனைப் பார்த்து அதனை சபைக்குள் அழைத்து வரச் சொன்னார்.
உள்ளே வந்த நாயின் தலை உடைப்பட்டிருந்தது. அதைக் கண்டு இராமர் "யார் உன்னை இப்படி அடித்தது?" எனக்கேட்கவே அது "சர்வார்த்தசித்தி என்னும் இப்படி அடித்து விட்டார். நான் அவருக்கு எவ்விதத் தீங்கும் இழைக்கவில்லை" என்றது.
இராமரும் அந்த சாதுவை அழைத்து விசாக்கவே அவரும் "நான் வீடு, வீடாக அலைந்து பிச்சை கிடைக்காது திண்டாடி வருகையில் இந்த நாய் குறுக்கே வந்து நன்றது. எவ்வளவு மிரட்டி, அதட்டியும் வழி விடாமற் போகவே நான் இதன் தலைமீது அடித்தேன். இதற்கு நீங்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்" என்றார்.
அவருக்கு என்ன தண்டனை விதிப்பதுதென இராமர் சபையோர் இடம் கேட்டார். யாரும் ஒன்றுமே கூறவில்லை. அப்போது அந்த நாயே "நான் கூறும் தண்டனையை விதியுங்கள். காலஞ்சரமென்னும் இடத்தின் குலபதியான இவரை நயமித்து விடுங்கள்" என்றது.

அதற்கு நாயும் "நான் ற்பிறப்பில் அந்த இடத்தின் குலபதியாக இருந்தேன். எல்லா வசதியும் இருந்தன. நில்லவனென்றும் நான் பெயர் எடுத்தேன். தேவர்களையும், அந்தணர்களையும் பூசித்து வந்தேன். ஆனால், அப்பதவியில் இருந்ததால் நான் நாயாக இந்தப் பிறப்பில் பிறக்க வேண்டியதாயிற்று. முன் கோபம், இரக்கமில்லா நெஞ்சம் கொண்ட அந்த சாது அப்பதவியிலிருந்தால் பல பிறப்புகள் நாயாகவே பிறந்து கொண்டிருப்பார்" என்றது.
நாய் போன பிறகு, ஒரு கழுகும், ஆந்தையும் இராமடம் ஒரு வழக்கைக் கூற வந்தன. இரண்டும் ஒரே காட்டில் வசித்தன. அவை வசிக்கும் இடம் பற்றிய உமைத் தகராறு ஏற்படவே அவ்வழக்கைத் தீர்த்து வைக்க இராமர் தம் மந்திகளோடு புஷ்பக விமானத்தில் ஏறிக்கொண்டு அவை வசித்து வந்த இடத்தை அடைந்தார்.
கழுகோ பூமியில் மானிடர்கள் பிறந்தபோதே தான் அங்கு தன் வீட்டைக் கட்டியதாகக் கூறியது. ஆந்தையோ பூமியில் மரஞ்செடிகள் தோன்றியபோதே தான் அங்கு தன் இல்லத்தை அமைத்ததாகக் கூறியது. இதைக்கேட்டபின் யாவரும் "சிருஷ்டியில் முன்னதாகத் தோன்றியது தாவரங்களே. எனவே, ஆந்தைக்கே அவ்வீடு சொந்தம்" என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தனர். இராமர் கழுகிற்கு தண்டனை அளிக்க விரும்பினார்.
அப்போது ஒரு அசரீர வாக்கு "இராமா. இந்தக் கழுகு ஏற்கனவே சாபம் பெற்றுள்ளது. இது இதற்குன் பிரம்மதத்தனென்னும் அரசனாகும். அந்த மன்னன் மிகவும் பராக்கிரமசாலி. ஏராளமாகப் பணம் படைத்தவன். நேர்மை தவறாதவன். இவனது இல்லத்தில் கௌதமர் விருந்தாளியாக வந்தார். அவருக்கு அரசனே உபசத்து பல நாட்கள் விருந்தளித்தான். ஒரு நாளைய சாப்பாட்டில் ஒரு மாமிசத்துண்டு எப்படியோ கலந்து விட்டது. இதனை அரசன் கவனிக்கவில்லை. கௌதமர் சாப்பிடும்போது அதனைக் கண்டு கோபம் கொண்டு மன்னனைக் கழுகாகும்படி சபித்தார். பின்னர், சினம் தணிந்து இக்ஷ்வாகு வம்சத்தில் இராமர் பிறந்து அதனைத் தொட்டால் முன்போலாவாரென சாபவிமோசனம் அளித்தார்" என்றது.

அவர்களும் தம்மை லவணாசுரன் என்பவன் தொல்லைகளுக்கு காளாக்குவதாயும் அவனிடமிருந்து தாங்களைக் காக்க வேண்டுமென முறையிட்டனர். லவணாசுரன் என்பவன் மது என்னும் அரக்கனின் மகன். மது சிவபெருமானைக் குறித்து நீண்ட காலம் தவம் செய்து அவர் மனதைக் களிப்பித்தான். அவரும் தன் திரிசூலத்திலிருந்து வேறொரு சூலம் வரச்செய்து அதனை மதுவிடம் கொடுத்து ‘இது உன்னிடம் இருக்கும்வரை யாரும் உன்னை எதுவும் செய்ய முடியாது" எனக் கூறினார்.
அப்போது அவன் அந்த சூலம் தன் குடும்பத்தவரிடம் என்றென்றும் இருக்க அருளவேண்டுமெனக் கேட்கவே சிவனும் "இது உன்னிடம் இருக்கும்.
அதற்குப் பிறகு உன் மகனிடம் மட்டும் இருக்கும்படி செய்கிறேன்" எனக்கூறி மறைந்தார். மது இராவணனுக்குத் தங்கை முறையான கும்பினசையை அவன் மணந்தான். அவர்களுக்குப் பிறந்தவன் லவணன். சிறுவயது முதல் அவன் பாவங்களையே செய்து வந்தான். மது வருணலோகத்திற்குச் செல்லும்போது சிவபிரான் கொடுத்த சூலத்தைத் தன் மகனிடம் கொடுத்தான். அதன் சக்தியை அறிந்திருந்த லவணன் மேலும், கர்வப்பட்டு யாவரையும் துன்புறுத்தலானான்.
இவ்விதமாக முனிவர்கள் லவணனது வரலாற்றை இராமடம் கூறவே அவரும் "அவனை நான் அழிக்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள்" எனக்கூறிவிட்டு தன் தம்பிகளிடம் "உங்களில் யார் லவணனைக் கொல்லப் போகிறீர்கள்?" எனக் கேட்டார்.

பட்டாபிஷேக வைபவம் முடிந்ததும் இராமர் ஒரு பாணத்தை எடுத்து சத்துருக்கனனிடம் கொடுத்து "இது மது, கைடபன் ஆகிய இருவரையும் கொன்ற பாணம். இதனை நான் இராவணன்மீது கூட எய்யவில்லை. இதனால் நீ லவணனைக் கொன்று வா. அவனிடம் பரமசிவன் கொடுத்த சக்தி வாய்ந்த சூலம் ஒன்று இருக்கிறது. அது அவன் கையில் இருக்கும்வரை அவனை யாராலும் வெல்ல முடியாது. எனவே, சூலம் இல்லாத சமயமாகப் பார்த்து அவனைத் தாக்கு. அவனது நிகரைச் சுற்றி முற்றுகையிட்டு அவன் நிகரத்திற்குள் நுழையாதபடி செய். அப்போது அவனை எளிதில் கொல்ல முடியும்" என்றார்.
சத்துருக்கனன் ஒரு படையை முன்னதாக அனுப்பி பின்னால் அவன் செல்ல வேண்டும் என்று கோடையில் கங்கை கடந்து படைகள் செல்ல மாகாலத்தில் சத்துருக்கனன் அந்த அரக்கனைத் தாக்க வேண்டும் என்றும் இராமர் யோசனைச் சொல்லி அனுப்பினார். அதன்படியே அவன் தன் படைகளை முன்னதாக அனுப்பிவிட்டு ஒரு மாதகாலத்திற்குப் பின்னரே அவன் சென்றான். வழியில் அவன் வால்மீகி முனிவரது ஆசிரமத்தில் தங்கி அவரது உபசரிப்பை ஏற்றான். அப்போது அந்த ஆசிரமம் ரகு வம்சத்தவரதே எனக் கூறி வால்மீகி அது பற்றிக் கூறலானார்.
ரகு வம்சத்தில் சுதாசன் என்பவன் இருந்தான். அவன் மைந்தன் வீரசகன். ஒருநாள் அவன் காட்டில் வேட்டைஆடிக் கொண்டிருந்தபோது இரு அரக்கர்களைக் கண்டான். அவர்கள் புலியுருவில் திரிந்து காட்டு மிருகங்களைக் கொன்று தின்று வந்தனர். இதனால் காட்டில் மிருகங்களே இல்லாது போயிற்று.வீரசகன் அப்புலிகளில் ஒன்றைக் கொன்று விட்டான். அதனால் கோபம் அடைந்த மற்ற அரக்கன் "என் தோழனைக் கொன்ற உன்னை என்ன செய்கிறேன் பார்" எனக் கூறி திடீரென மாயமாக மறைந்து போனான். கொஞ்ச காலத்திற்குப் பின் அம்மன்னன் இந்த ஆசிரமத்தில் ஒரு பெரிய அசுவமேத யாகத்தை வசிஷ்டரைக் கொண்டு செய்தான்.
யாகம் முடிவடையும்போது அந்த அரசன் மீது பகைமை கொண்ட அரக்கன் வசிஷ்டர்போல உருவம் எடுத்து வந்து "அரசே, யாகம் முடிந்து விட்டது. எனவே, எனக்கு மாமிச உணவு கொடு" என்றான். தைக்கேட்டு அரசன் தன் சமையல்காரனைக் கூப்பிட்டு "குருவின் விருப்பப்படி ருசியான மாமிச உணவைத் தயாரி" எனக் கட்டளையிட்டான். இதன் பிறகு அந்த அரக்கன் சமையல்காரனைப் போல உருவெடுத்து மனிதமாமிசம் கொண்டு உணவு தயாரித்து அரசனிடம் போய் "நீங்கள் கூறியபடி உணவு தயாரித்து விட்டேன்" என்றான்.
அரசனும் தன் மனைவியின் கையால் வசிஷ்டருக்கு அந்த உணவைப் பரிமாறச் செய்தான். தனக்குக் கொடுக்கப்படுவது மனிதமாமிசம் எனக் கண்டு கொண்ட வசிஷ்டர் கோபம் கொண்டு "நீ மனிதர்களைக் கொன்று தின்பவனாகப் போ" எனச் சபித்தார். அரசனும், வசிஷ்டரைச் சபிக்க நீரை எடுத்தான். இதற்குள் அவன் மனைவி குறுக்கிட்டு "குரு நமக்கு தெய்வம் போலாவார். அவரை சபிக்கக் கூடாது" என்றாள். அவன் தான் எடுத்த நீரைத் தன் காலில் தெளித்துக் கொள்ள அவனது பாதங்களில் ஊனம் ஏற்பட்டது.
வசிஷ்டருக்கும் உண்மையில் நடந்தது என்ன என்பது தெரிந்து போயிற்று. அதனால் சாபம் பனிரெண்டு ஆண்டுகள் மட்டுமே இருக்கச் செய்தார். அதன் பிறகு, அம்மன்னன் மீண்டும் முன் போலாகி நாட்டை ஆண்டு வந்தான். ந்தக் கதையை வால்மீகியிடம் இருந்து சத்துருக்கனன் கேட்டுக் கொண்டிருக்கும்போதுதான் சீதை இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள்.

0 comments:
Post a Comment