அனுமாரும் இராமர் கூறியபடி சீதாதேவியைக் கண்டு "தேவி, இராமர் தம் தம்பியான இலட்சுமணருடனும் வானர மன்னனான சுக்கிரிவனுடனும் சுகமாக இருக்கிறார். அவர் வானரசேனையின் உதவியால் எதிகளை வென்று இராவணனைக் கொன்றார். இராவணனது தம்பியான விபீஷணன் இலங்கைக்கு மன்னனானான். இப்போது நீங்கள் விபீஷணனின் மாளிகையில் இருக்கிறீர்கள். அவனால் உங்களுக்கு எவ்விதத் தீங்கும் நேராது" எனக் கூறினார்.
அதைக்கேட்ட சீதை மிகவும் மகிழ்ந்து போனாள். அவள் சற்றுநேரம் வரை பேசாதிருந்து, பிறகு "நற்செய்தி கொண்டுவந்த உமக்கு நான் பசு அளிக்கும் நிலையில்கூட இப்போது இல்லையே" என்றாள்.
அது கேட்டு அனுமார் "ஆகா! இராமருக்கு ஏற்ற மனைவியாகவே இருக்கிறீர்கள். இனி நான் விடை பெற்றுக்கொள்கிறேன். இராமரிடம் நான் என்ன சொல்வது?" எனக் கேட்டார். அதற்கு சீதை "நான் அவரைப் பார்க்க வேண்டும்" என்றாள்.
அனுமார் "இதைப்போய் அவரிடம் தெரிவிக்கிறேன்" எனக்கூறி விட்டு அங்கிருந்து இராமர் இருக்கும் இடத்திற்குப் போனார். அவர் இராமரிடம் "தேவி உங்களுக்கு வெற்றி கிடைத்தது கேட்டு மகிழ்ந்து போய் இருக்கிறார். அவர் உங்களைக் காண விரும்புகிறார்" என்றார். இராமரது கண்களில் கண்ணீர் பெருகுகிறது. அவர் சற்று யோசிக்கலானார். சீதை மகா உத்தமி. மாசற்றவள். அவளை ஏற்க அவர் தயார். ஆனால், இராவணனிடம் சிறைப்பட்டுக்கிடந்த அவளை ஏற்றால் உலகம் என்ன எண்ணும்? எனவே, அது விஷயமாக அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.
அவர் விபீஷணனிடம் "விபீஷணா, நீ சீதாதேவியை இங்கே அழைத்து வா" எனக் கட்டளை இட்டார். விபீஷணனும் அவ்விதமே செய்வதாகக் கூறி மாளிகைக்குக் சென்றான்.
அவன் சில பெண்களின் முலம் சீதைக்கு ஸ்நானத்திற்கும், ஆடைகளுக்குமான ஏற்பாடுகளையும் செய்தான். சீதை குளித்து வாசனை திரவியங்களைப் பூசிக்கொண்டு நல்ல ஆடைகளைக் கட்டிக்கொண்டும் நகைகளை அணிந்து கொண்டும் அங்கிருந்து இராமரைக் காண ஒரு பல்லக்கில் அமர்ந்து சென்றாள். விபீஷணன் தலிய அரக்க பிரமுகர்களும் உடன் சென்றனர்.
இராமர் ‘சீதை மிகவும் நற்குணடையவள். அப்பழுக்கு சொல்ல முடியாது. இதை நான் நன்கு அறிவேன். ஆயினும் சட்டென நான் அவளை ஏற்றால் எல்லாரும் என்ன நினைப்பார்கள்? இராவணனிடம் சிறைப்பட்டுக் கிடந்தவளை அப்படியே ஏற்றுக் கொண்டானே இந்த இராமன் என ஒரு படி தாழ்வாகவே கருதுவார்கள். இதற்கு இடம் தரக்கூடாது’ என எண்ணமிட்டவாறே இருந்தார். விபீஷணன் சீதை வந்து இருப்பதை அறிவித்ததும் அவளைத் தன் ன் அழைத்து வருமாறு கூறினார்.
விபீஷணன் சீதையை இராமர் முன் அழைத்து வந்தான். சீதையும் குனிந்த தலை நிமிராது தன் கத்தைப் புடைவையின் தலைப்பால் மறைத்தவாறே இராமன் முன்பாக வந்து நின்றாள்.
அப்போது இராமர் தன் குரலைக் கடினமாக்கிக் கொண்டு "சீதையே, உன்னை நான் சிறை மீட்க இராவணனோடு போராடினேன். பல கஷ்டங்களை அனுபவித்து அவன் எனக்கு உண்டாக்கிய அவமானத்தைப் போக்கிக் கொண்டேன். இதெல்லாம் தன்மானம் என்பதைக் காக்கவே நான் செய்தது. என் வம்சத்திற்கு எவ்வித களங்கம் ஏற்படக்கூடாது என்பதற்காக இப்போரை நடத்தி வெற்றி பெற்றேன். இராவணனைக் கொன்றேன். இனி நீ யாரிடம் சிறைப்பட்டிருக்கவில்லை.
உன்னை விடுதலை செய்து விட்டேன். இவ்வளவு நாள்களாக இராவணனிடம் சிறைப்பட்டுக் கிடந்த நீ விடுதலை பெற்றதால் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்" என்றார்.
சீதை இதனையா கேட்க இவ்வளவு காலம் சிறைப்பட்டு வாடி வதங்கினாள்!! அவளுக்கு இது பெருத்த இடிபோல் ஆயிற்று. இராமரா இப்படி கூறினார்? அப்படியானால் ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு மதிப்புள்ளது? ஆம் அதற்குய மதிப்பைக் கொடுத்தே ஆக வேண்டும்.
சீதையும் "பிரபுவே, நீங்கள் இவ்வளவு கொடிய வார்த்தைகளைக் கூறியே இருக்க வேண்டாம். உங்களது சொற்களிலிருந்து நான் ஏதோ குற்றம் செய்து விட்டவளென்பது தொனிக்கிறது. நான் எவ்விதக் குற்றம் புரியாதவள். மனத்தால்கூட நான் உங்களைத் தவிர வேறுயாரையும் எண்ணியதே கிடையாது. நீங்களோ என்னை ஏற்க இயலாது எனக் கூறும்போது எனக்கு விட்டவழி கணவனால் கைவிடப்பட்ட ஸ்திரீ தேர்ந்தெடுக்கும் ஒரே வழி. அதையே நானும் தேர்ந்தெடுக்கிறேன். இலட்சுமணா, உடனே நீ மரக்கட்டைகளைக் கொண்டு வந்து தீ முட்டு. நான் தீக்குளித்து விடுகிறேன்" என்றாள்.
இலட்சுமணன் என்ன செய்வது எனத் தெரியாது இராமரைப் பார்க்கலானான். இராமர் எவ்வித ஆட்சேபணையும் கூறாது இருப்பது கண்டு உடனேயே அவன் மரக்கட்டைகளை எல்லாம் கொண்டு வந்து போட்டு தீயை ரிட்டினான்.
இராமர் தலை குனிந்தவாறே மௌனமாக அத்தீயைப் பார்த்து கொண்டு இருந்தார்.
சீதை இராமரை ம்றை வலம் வந்து வணங்கிவிட்டு ஆகாயத்தையும், பூமியையும் வணங்கினாள். அதனால் தேவர்களையும், பிராம்மணோத்தமர்களையும் வணங்கியதாக திருப்தி அடைந்து அவள் அக்கினியினருகே போய் "நான் என் கணவரைத் தவிர வேறு யாரையும் மனத்தால்கூட எண்ணியதில்லை. நான் குற்றம் அற்றவளளென்பது உண்மையானால் இந்த அக்கினியே அதற்கு சாட்சி கூறட்டும்" எனக் கூறியவாறே தீயினுள் நுழைந்து விட்டாள்.
இதைக்கண்ட வானரர்களும், அரக்கர்களும் ‘ஆ’ வெனக் கூறியவாறே நின்றனர். இராமரது கண்களோ கண்ணீர்த் துளிகளை உகுத்தன. அதே சமயம் பிரம்மனும், சிவனும், இந்திரனும், யமனும், வருணனும், குபேரணும் மற்றும் பல தேவர்களும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
"உலகை காக்கும் நீங்கள் சீதா தேவி அக்கினியுள் நுழைவதைக் கண்டு மௌனம் வகிக்கலாமா?" எனக் கேட்டார் பிரம்மா. அப்போது இராமர் "நான் இப்போது தசரத மன்னனின் புதல்வன். முன் பிறப்பில் யார் என்பதைக் கூறுங்கள்" என்றார். பிரம்மாவும் "நீங்கள் காத்தலென்னும் தொழிலைப் புரியும் விஷ்ணுவன்றோ? சீதை லட்சுமிதேவி. இராவணனை ஒழிக்கவே நீங்கள் இராமராக அவதாரம் எடுத்தீர்கள். நீங்கள் அவதாரம் எடுத்த வேலை இத்துடன் முடிந்து விட்டது. இனி வைகுண்டத்திற்கு வரலாம்" என்றார்.
இதேசமயம் அக்கினியும் அங்கு வரவே சீதை புகுந்த தீ அணைந்து விட்டது. சீதையை இராமடம் ஒப்படைத்து அவன் "தேவியார் மாசற்றவரென்பதை நானா உங்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்?" இவரது உள்ளம் உங்களுக்குத் தெரியாதா? இவரை எக்கும் சக்தி எனக்கு ஏது?" எனக்கூறி தேவியாரை ஏற்க வேண்டினான். அப்போது இராமர் சீதையிடம் "சீதையே உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா? பிறர் சொல்லித்தான் நான் தெரிந்து கொள்ள வேண்டுமா? உன்போன்ற கற்புக்கரசியைக் கூட நான் கொடுஞ் சொற்களைக் கொண்டு மனம் நோகச் செய்துவிட்டேன். ஆனால், அதைச் செய்ததாலேயே யாவரும் உன் மகிமையைத் தெரிந்து கொண்டனர்.
நெருப்பே உன்னைத் தகிக்க முடியாதபடி அவ்வளவு சற்குணவதி என்பதை யாவருக்கும் உணர்த்தி இராவணன் உன்னை அணுகக் கூட முடியாது என்பதை எடுத்துக்காட்டவே இப்படி நான் நிடந்து கொண்டேன். இனி உன்னை நான் ஏற்க எவ்விதத் தடையும் இல்லை" என்றார்.
அப்போது பரமசிவன் "இராமா, உன் தந்தை சொர்க்கத்திலிருந்து வந்திருக்கிறார். நீ அவரது வார்த்தைகளை உண்மையாக்கியதனால் அவருக்கு இந்திரலோகம் கிடைத்துள்ளது" என்றார். அதே சமயம் தசரதரும் ஒரு விமானத்தில் வந்து இறங்கினார்.
இராமரும், இலட்சுமணரும் தம் தந்தையைக் கண்டு ஆனந்தம் அடைந்தனர். அவரை வணங்கினர். தசரதரும் அவரைக் கட்டித் தழுவியவாறே "இராமா, உன்னைக் காட்டில் தவிக்க விட்டு விட்டு எனக்கு சொர்க்கலோகத்தில் சுகம் ஏது? உன்னை காட்டிற்கு அனுப்ப கைகேயிக்கு வரம் கொடுத்தேனே என்பதை எண்ணி எண்ணி இப்போதும் என் மனம் ஏங்குகிறது. ஆனால், உன் பட்டாபிஷேகத்தைத் தடுத்து நறுத்தியது தேவர்கள். நீ இராவணனைக் கொல்ல வேண்டும் என்பதற்காக காட்டிற்குச் செல்ல வேண்டியதாயிற்று. பதிநான்கு ஆண்டுகள் முடிந்ததும் நீ அயோத்திக்குப் போய் பட்டாபிஷேகம் செய்து கொள். உன்னை உன் தாயார் கௌசல்யை கண்டு மகிழ்ந்து போவாள்" என்றார்.
அதன் பின்னர் அவர் இலட்சுமணனிடம், சீதையிடம் பேசி அவர்களுக்கு சில புத்திமதிகளைக் கூறினார். இந்திரனும், இராமரை ஆசீர்வதித்துவிட்டு "உங்களுக்கு ஏதாவது வேண்டுமானால் கேளுங்கள்" என்றார். இராமரும் "எனக்காகப் போட்டு மடிந்த வானரங்களும் கரடிகளும் மீண்டும் உயிர் பெற்று எழுந்தால் அதுவே போதும்" என்றார். இந்திரனும் அவ்விதமே செய்துவிட்டு மற்ற தேவர்களுடன் மறைந்தான். இறந்துபோன வானரர்கள் மீண்டும் உயிர்பெற்று வந்தது கண்டு எல்லாரும் மகிழ்ந்தனர். அன்றைய இரவு யாவரும் சுகமாகத் தூங்கினர். மறுநாள் விபீஷணன் இராமரிடம் வந்து "நீங்கள் என் மாளிகைக்கு வந்து உடைகளை மாற்றி விருந்துண்ண வேண்டும்" என அழைத்தான்.
அதற்கு இராமர் "இதையெல்லாம் சுக்கிரிவனும் மற்றவர்களும் ஏற்கட்டும். நான் பதிநான்கு ஆண்டுகள் கழிந்ததும் உடனேயே தம்பி பரதனைச் சந்திப்பதாக வாக்களித்திருக்கிறேன். நான் குறிப்பிட்ட நாளன்று அயோத்தி போய்ச் சேராவிட்டால் பரதன் தீ வளர்த்து அதில் குதித்து விடுவான். எனவே, நான் சற்று தாமதியாது அயோத்திக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்" என்று அவனிடம் கூறினார். அதற்கு விபீஷணன் "இங்கேதான் குபேரனின் புஷ்பக விமானம் இருக்கிறதே. அதை நான் குபேரனிடம் கொடுக்கவில்லை. உங்களை அது ஒரே நாளில் அயோத்திக்கு கொண்டு போய் சேர்த்துவிடும். எனவே, நான் இடும் விருந்தை ஏற்கவேண்டும்" என்றான்.
அப்போது இராமர் "நீ புஷ்பக விமானம் கொடுப்பதே பெரிய விருந்து இட்டதற்குச் சமம். உன் பக்தியே போதும். வேறு எதுவும் கொடுத்து என்னை உபசரிக்க வேண்டாமே" எனக் கூறி மறுத்து விட்டார்.
0 comments:
Post a Comment