சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை!



 "சார்! ரொம்ப நாளா உங்களை ஒண்ணு கேக்கணும்னு நினைச்சிட்டிருந்தேன்"
"என்ன அது.. எதுவா இருந்தாலும் கேளுங்க..."
" சமீபகாலமா நீங்க சட்டையே போடுறதில்லையே... வெறும் வேட்டியோட வெளியில திரியறீங்களே...அது ஏன்?"
"சட்டை இல்லைன்னா சங்கடம் இல்லை"
"மகான்கள் மாதிரி பேசுறீங்களே..."
"உண்மை தான்... ஒரு ராஜா எப்பவும் துன்பப்பட்டுக்கிட்டே இருந்தாராம். ஒரு வேதாந்திரியைக் கூப்பிட்டு, என் துன்பம் தீர என்ன வழின்னு கேட்டாராம். அதுக்கு அந்த வேதாந்திரி 'போதும் என்ற மனசுடைய ஒருத்தனை தேடி கண்டுபிடிச்சி, அவனுடைய சட்டையை வாங்கி போட்டுக்க, உன் கவலை போய்டும்' னு சொன்னாராம்"
"அட.. சுலபமான வழியா இருக்கே..."
"அப்படித்தான் அந்த ராஜாவும் நினைச்சிகிட்டு ராஜாவும் அந்த மனுஷனைத் தேடி அலைஞ்சாராம். ஆனா யாருக்குமே போதும்ங என்ற மனசே இல்லாததால நொந்து போனாராம். கடைசியில ஒருத்தன் கிடைச்சானாம். ஆனா அவன் சட்டையே போடலை"
"சிந்திக்க வேண்டிய விஷயம் சார். நீங்களும் அந்த மனுஷன் மாதிரி தானா?"
"நானும் 'போதும்டா சாமி' என்பதால் தான் சட்டை போடல. ஆனா என் கதை வேற மாதிரி"
"எப்படி சார்"
"ஆரம்பத்துல நானும் சட்டை போட்டுக்கிட்டு தான் இருந்தேன். என் சட்டையை என் கையால துவைச்சி போடுவேன், அடுத்தவங்களுக்கு சிரமம் கொடுக்க மாட்டேன். கல்யாணம் ஆனதுக்கு பிறகு என் மனைவி துவைக்க ஆரம்பிச்சாங்க. அதுதான் எனக்கு கஷ்டமா போச்சு! அப்புறம் தான் சட்டையே போட வேணம்னு விட்டுட்டேன்!
"மனைவிக்கு சிரமம் கொடுக்கக் கூடாதுங்கிறதுக்காகவா?"
"இல்ல..எனக்கு சங்கடம் வேணாம்னுதான்"
"என்ன சொல்றீங்க?"
" பொதுவா சட்டையை கழட்டுனதுக்கு அப்புறம் தானே துவைப்பாங்க... ஆனா என் மனைவி நான் சட்டையை கழட்டுறதுக்கு முன்னாடியே துவைக்க ஆரம்பிச்சிடுவா!"

0 comments:

Post a Comment

Flag Counter