யுத்த காண்டம் - 6


நீலன் கிழக்கு வாசலில் பிரகஸ்தனை எதிர்ப்பதெனவும், அங்கதன் தெற்கு வாசலிலுள்ள மகாபாச்சுவனையும், மகோதரனையும் எதிர்ப்பதெனவும், அனுமார் மேற்கு வாசலுக்கும், இராமபிரானும் இலட்சுமணரும், இராவணன், சுகனோடும் சாரணனோடும் காவல் புரியும் வடக்கு வாசலுக்கு படைகளோடு செல்வது என முடிவு செய்யப்பட்டது.

நகரத்தில் உள்ளே உள்ளவர்களைத் தாக்க சுக்கிரீவனும், ஜாம்பவந்தனும் விபீஷணனும் செல்வதெனத் தீர்மானிக்கப்பட்டது. போரின் போது இராமர், இலட்சுமணர், நீலன், அங்கதன், அனுமார், சுக்கிரீவன், விபீஷணன் ஆகியவர்களைத் தவிர வேறு யாரும் மானிட உருவம் எடுக்கக் கூடாது எனவும், மற்றவர்களெல்லாம் தத்தம் உண்மை உருவிலேயே இருக்க வேண்டுமெனவும் இந்த நியமத்தை மீறக்கூடாதெனவும் இராமர் கூறினார்.

இராமர் சுவேளை என்னும் மலை மீது ஏறினார். அவர் பின்னால் இலட்சுமணன், சுக்கிரீவன் முதலிய வானரப் பிரமுகர்களும் சென்றனர். அங்கிருந்து யாவரும் இலங்கைப் பட்டணத்தைப் பார்த்தனர். எங்கும் அரக்கர்கள் ஆயுதங்களை வைத்துக் கொண்டு போருக்குத் தயாராக நின்று கொண்டிருப்பதைக் கண்டனர். அச்சமயம் மாலை மறைந்து நிறை மதியும் உதயமாகியது. இராமரும் மற்றவர்களும் அன்றைய இரவுப் பொழுதை அங்கேயே கழித்தனர்.

மறுநாள் காலை இராமர் தாம் தங்கி இருந்த இடத்திலிருந்தே நன்றாக இலங்கையைக் கண்டார். மிகவும் அழகாக நிர்மாணிக்கப்பட்டிருந்த அந்நகரைக் கண்டு ஆச்சரியப்பட்டு நின்றார். அதே சமயம் இராவணன் அவனது நகரில் அங்கும் இங்குமாக செல்வதையும் கண்டார். இராமரோடு, சுக்கிரீவனும் மற்றவர்களும் இராவணனைப் பார்த்தனர். உடனே சுக்கிரவனுக்குக் கடும் கோபமும், ஆத்திரமும் வந்து விட்டது. ஒரே எழும்பில் அவன் ஆகாயத்தில் சென்று இராவணன் இருக்கும் இடத்தை அடைந்து, அவனது தலையிலுள்ள கிரீடத்தைத் தன் காலால் உதைத்துத் தள்ளினான்.

உடனே இராவணன் சுக்கிரீவனைப் பிடித்துத் தள்ளவே அவன் பந்து போலத் துள்ளிஎழுந்து இராவணனையே கீழே தள்ளி செயலற்றுப் போகச் செய்தான். பின்னர் அவன்சிறிதும் தாமதிக்காமல் ஆகாயத்தில் கிளம்பி தன் இருப்பிடத்தை அடைந்தான்.


 அப்போது இராமர், “சுக்கிரீவா, நன்றாகச் செய்தாய் ஆனாலும் நீ ஒரு அரசனாக இருந்து இப்படி அவசரப்படக்கூடாது. உனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் என்ன ஆவது?” எனக் கூறினார். அதற்கு சுக்கிரீவன், “சீதையைக் கவர்ந்த அதமனைக் கண்டதுமே என் ஆத்திரம் பொங்கியது. அதனைச் சட்டென என்னால் அடக்க முடியவில்லை” எனக் கூறினான்.
அதன்பிறகு வானரப்படைகளோடு யாவரும் இலங்கைப் பட்டணத்தை நோக்கிப் புறப்பட்டனர். திரிகூட மலைமீதிருக்கும் அந்நகரை அவர்கள் முற்றுகையிட்டனர். முன்பு திட்டமிட்டபடி அவர்கள் ஒவ்வொரு வாசலையும் தாக்கலாயினர்.

அப்போது இராமர் அங்கதனிடம் “நீ சற்றும் மனத்தில் பயமில்லாது இலங்கைக்குள் செல். இராவணனிடம் நான் சொன்னதாக இதைச் சொல். இராவணா, சீதையை நீ அபகரித்தாய், அதனால் உனக்கு நான் எமன் போல வந்திருக்கிறேன். நீ மட்டும் சீதையை என்னிடம் ஒப்படைத்து விட்டால் இந்தப்போரே மூளாது. இல்லாவிட்டால் உன் பலத்தைக் கொண்டு என் தாக்குதலை சமாளி.

உன் அரக்கர் குலமும் அடியோடு அழியத்தான் போகிறது. நீயும் என்பாணத்திற்கு இரையாவாய். இந்தச் செய்தியை நீ சொல்லி வா” எனக்கூறி அவனைஅனுப்பினார். அங்கதனும், இராமரின் தூதனாக இராணவனன் தன் மந்திரிகளோடுஆலோசனை செய்து கொண்டு இருக்கும்போது அவன் முன் போய் நின்றான். அவன்இராவணனிடம் தான் இராமனின் தூதன் எனக்கூறி இராமர் சொல்லி அனுப்பியசெய்தியையும் கூறினான்.


அதைக்கேட்ட இராவணன் கோபம் அடைந்து, “இவனைப் பிடித்துக் கொல்லுங்கள்”என்று கட்டளை இட்டான். அவனைப் பிடிக்க நான்கு அரக்கர்கள் ஒடி வந்தனர்.அங்கதனோ அவர்களைத் தன் கைகளுக்கிடையே இடுக்கிக்கொண்டு உயரக் கிளம்பிச்சென்றான். அவன் ஆகாயத்தில் மிக உயரத்தில் போய் தான் இடுக்கிக் கொண்டுவந்த நால்வரையும் கீழே போட்டான். அவர்கள் தொப்பெனக் கீழே விழுந்தனர்.இதே சமயம் அங்கதனின் கண்களில் இராவணனது மாளிகையில் கோபுரம் பட்டுவிட்டது. அவன் அதனைத் தன் காலால் உதைக்க அது சரிந்து விழுந்தது. அவன்யாரென்று யாவரும் கேட்க உரக்கக் கூறி, அங்கிருந்து இராமர் இருக்கும்இடத்தை அடைந்தான்.


0 comments:

Post a Comment

Flag Counter