யுத்த காண்டம் - 3

 
விபீஷணன் நாட்டை அடையும் ஆசையோடு வந்திருக்கலாமென அனுமார் கூறியது கேட்டு இராமரும் "எது எப்படியானாலும் சரி நம்மிடம் சரண்புக வந்திருப்பவன் யாரானாலும் சரி! அவனுக்கு நாம் தஞ்சம் அளித்தே
ஆக வேண்டும்'' என்றார்.

சுக்கிரீவனோ "இவனால் நமக்கு என்ன நன்மை? மேலும் தன் அண்ணனுக்கு துரோராகம் செய்பவன் நம்மிடம் மட்டும் விசுவாசமுள்ளவனாக இருப்பானென்று என்ன நிச்சயம்? எனவே இவனை நாம் பூரணமாக நம்பிவிடக்கூடாது. எச்சரிக்கையுடனேயே இருக்க வேண்டும்'' எனக் கூறினான்.

அதற்கு இராமர் "அரச குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு சில உரிமைகள் உண்டு. சில சமயங்களில் அவர்கள் தம் கூடப் பிறந்தவர்களைக்கூட சந்தேகிப்பார்கள். அதுபோல இராவணன் தன் தம்பியான இவனை நம்ம வில்லை. அதனால் விபீஷணன் நம்மோடு சேர்ந்து நாட்டை அடைய விரும்புகிறான்'' என்றார்.

அப்போதும் சுக்கிரீவன் ""இவனை நம்பக்கூடாது. இவன் ஒரு மோசக்காரன் என்றே எனக்குப்படுகிறது'' என்றான். அது கேட்டு இராமர் "அப்படியே இருந்தாலும்கூட இவனால் நம்மை என்ன செய்துவிட முடியும்? இராவணனே இம்மாதிரி வேஷம் பூண்டு என்னிடம் சரண்புக வந்தாலும் கூட நான் கண்டிப்பாக அபயம் அளிப்பேன். எனவே நீ போய் அவனை அழைத்து வா'' எனக் கூறினார்.

 அது கேட்டு சுக்கிரீவனும் ஒருவாறு மனம் மாறியவனாக விபீஷணனை இராமரிடம் அழைத்து வந்தான்.

நான்கு வீரர்களோடு வந்த விபீஷணன் இராமரது திருவடிகளில் விழுந்து வணங்கி ""நான் இராவணனின் தம்பி விபீஷணன். என் அண்ணன் என்னை அவமானப்படுத்தி விட்டான். நான் எனது உடைமைகளையெல்லாம் துறந்து உங்களிடம் சரண் புகுந்து விட்டேன். இனி என் வாழ்வு தாழ்வு உங்களிடம் இருக்கிறது'' என்றான்.

இராமரும், விபீஷணனுக்கு அபயம் அளித்து ""இராவணனது படை பலம் எவ்வளவு?'' எனக் கேட்க விபீஷணனும், ""இராவணன் ராட்சஸர்களாலோ அல்லது பூதங்களாலோ இறக்க முடியாதபடி பிரம்மாவிடம் வரம் பெற்றிருக்கிறான்.  இராவணனின் மற்றொரு தம்பியான கும்பகர்ணன் மகா பலசாலி. இராவணனின் படைத் தலைவன் பிரஹஸ்தன் குபேரனின் சேனாதிபதியை வென்றவன். இராவணனின் மகன் இந்திரஜித் பல வரங்களைப் பெற்றவன். அவனது கவசத்தைப் பிளப்பது கடினம். மறைந்து இருந்து போர் புரியும் திறமை பெற்றவன்.

இவர்கள் போக மகோதரன், மகாபார்சுவன் போன்றவர்களும் இருக்கிறார்கள்.  தம் விருப்பப்படி உருவம் எடுக்கும் அரக்கர்கள் இலங்கையில் பல்லாயிரம் பேர்கள் இருக்கிறார்கள். அவர்களது துணைகொண்டு தான் இராவணனின் ஆட்சி நடக்கிறது'' என்றான்.

அப்போது இராமர், ""விபீஷணா, நீ கவலைப்படாதே! இராவணனைக்கொன்று இலங்கையை உனக்கு அளிக்கிறேன் இது சத்தியம். இராவணன் என்னிடமிருந்து கண்டிப்பாகத் தப்பமுடியாது. அவன் எங்கே ஓடி ஒளிந்தாலும் அவனை என் பாணம் விடாது'' என்றார்.

விபீஷணனும் ""நானும் இப்போரில் கலந்து கொண்டு சில அரக்கர்களைக்கொல்கிறேன். எனக்கு  ரக்கர்களைப்பற்றிய இரகசியங்கள் தெரியும். ஆதலால் உங்களுக்கும் அவ்வப்போது கூறி துணை புரிவேன். நானும் போர்களத்தில் நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவேன்'' என கம்பீரமாகக் கூறினான்.

இதைக் கேட்டு இராமரும் சந்தோஷம் அடைந்து இலட்சுமணன் இடம் சமுத்திரஜலத்தைக் கொண்டு வரும்படிக் சொன்னார். அந்நீரை விபீஷணனுக்கு அபிஷேகம் செய்து வானரர்கள் இடையே விபீஷணனை இலங்கையின் மன்னனாக்குவதாக அறிவித்தார். வானரர்களும் மகிழ்ச்சிஆரவாரம் செய்தனர்.


 அதன் பிறகு தனிமையில் இருக்கும் போது சுக்கிரீவனும், அனுமாரும் விபீஷணனிடம், ""இந்தக் கடலை இவ்வளவு பேரும் கடக்க ஏதேனும் வழி உண்டா?'' எனக் கேட்டனர். அதற்கு விபீஷணன் ""இராமர் சமுத்திர ராஜனை அண்டினால் அவன் நிச்சயம் இராமருக்கு உதவி செய்வான். இராமரது முன்னோர்களில் ஒருவரான சகரனுக்கு சமுத்திர ராஜன் மிகவும் கடமைப் பட்டிருக்கிறான்'' என்றான்.

உடனே சுக்கிரீவன் இராமரும் இலட்சுமணனும் இருக்கும் இடத்திற்குப் போய் விபீஷணன் கூறியதைச்சொல்லி சமுத்திர ராஜனை ஆராதிக்கும் படி வேண்டினர்.  இராமரும் தர்ப்பைப் புல்மீதிலிருந்து சமுத்திரராஜனது வருகையை எதிர்பார்க்கலானார்.

இச்சமயத்தில் சார்த்தூலன் என்ற இராவணனின் ஒற்றன் வானர சேனைகளிருக்குமிடத்திற்குப் போய் அங்கு நடப்பதையெல்லாம் பார்த்து விட்டு இராவணனிடம் சென்றான்.

இராவணனிடம்அவன் ""வானரசேனை கடல் போல இலங்கைக்கு வந்து கொண்டிருக்கிறது.  இராமனும் இலட்சுமணனும் ஆயுதங்களுடன் கடற்கரையோரமாக இருக்கிறார்கள். அப்பெரிய சேனையின் அளவை நான் மதிப்பிட முடியாது போயிற்று. வேறு யாரையாவது அனுப்பி அதனையும் அறிந்து வரச் செய்யுங்கள்'' என்றான்.

அப்போது இராவணன் சுகன் என்ற அரக்கனை அழைத்து, அவனிடம் இரகசியமாக ஏதோ சொல்லி வானர சேனைக்குள் புகுந்து உளவு பார்த்து வரும்படி அனுப்பி வைத்தான். சுகனும் தன் பெயருக்கு ஏற்ப பட்சியின் உருவம் கொண்டு இலங்கையிலிருந்து கிளம்பி வானர சேனைகள் முகாம் இட்டிருக்கும் இடத்தை அடைந்தான்.

அவன் சுக்கிரீவனின் தலைமீது பறந்து ""வானர மன்னனே, எங்கள் இராவணேஸ்வரன் கூறி அனுப்பியதைக் கேள். வாலி இராவணனின் நண்பன். நீ அவனது தம்பி. உனக்கும் அவருக்கும் எவ்விதத்திலும் விரோதம் இல்லை. உயர் குடியில் பிறந்த நீ ஏன் இந்த தகராறில் தலையிடுகிறாய்? பேசாமல் இருந்து விடு. சீதை விஷயமாக இராவணனும் இராமனுமே ஒரு முடிவுக்கு வரட்டும். ஏனென்றால் இலங்கைக்குள் நுழைவது என்பது விளையாட்டு அல்ல'' என்றான்.
 இதைக் கேட்டதும்  சுக்கிரீவனுக்குக் கடுங்கோபம் வந்துவிட்டது. அவன் தன்னை சுற்றிலுமுள்ள வானரர்களைப் பார்த்தான். அவர்கள் சுக்கிரீவனின் குறிப்பை அறிந்து கொண்டனர்.

உடனேயே சில வானரர்கள் உயரக்கிளம்பிப் போய் சுகனைப் பிடித்துக்கீழே தள்ளினார்கள். அப்போது சுகன் ""இராமா, என்னை இந்த வானரர்கள் கொல்கிறார்களே. ஒரு தூதனைக் கொல்வது சரியா? நான் என் எஜமானர் கூறிய வார்த்தைகளை அப்படியே சொன்னேன் இதுதான் நியாயமா? தூதுவன் போல வந்த அனுமாரை நாங்கள் கொல்லவில்லையே. அதுபோல என்னையும் நீங்கள் கொல்லக் கூடாது. நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை அப்படியே நான் இராவணன் இடம் கூறுவேன். என்னை விட்டுவிடுங்கள்'' என்றான்.

 உடனே இராமரும் அவனை விட்டுவிடும்படிக் கூறவே, வானரர்களும் அவனை ஒன்றும் செய்யவில்லை.  அப்போது அவன் மீண்டும் ஆகாயத்தில் எழும்பி ""சுக்கிரீவா நான் இராவணனிடம் என்ன சொல்ல வேண்டும்?'' எனக் கேட்டான்.

அதற்கு சுக்கிரீவனும் ""நீ நான் சொல்வதை அப்படியே அங்கு சென்று சொல். இராவணன் எனக்கு நண்பன் அல்ல. என் நண்பரான இராமரின் விரோதி. என் விரோதியான வாலியின் நண்பன் இராவணன். இதனால் இராவணனை நான் அடியோடு ஒழிப்பேன். இலங்கையை நிர்மூலம் ஆக்குவேன். இராம பாணத்தினின்று இராவணனை யாராலும் காக்க முடியாது. சீதையைத் திருட்டுத்தனமாக யாருமில்லாத வேளையில் அபகரித்து வந்தது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றம் ஆகும். அந்தக் குற்றத்திற்குப் பரிகாரமாக இராவணன் சீதையை இராமர் இடம் கொண்டு வந்து ஒப்படைத்துவிட்டு மன்னிப்புக் கேட்கட்டும் இல்லாவிட்டால் கண்டிப்பாக போர் தான் நிகழும். இராவணன் இன்னமும் இராமரைப் பற்றி சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை'' என்றான்.

இதற்குள் அங்கதன் சுக்கிரீவன் இடம், "இவன் தூதன் ஆகத் தென்பட இல்லை. ஒரு ஒற்றன் ஆகவே காணப்படுகிறான். இதோ நம்மோடு பேசியவாறே நம் படைகளை கவனிக்கிறான். இவனைத் இலங்கைக்குத் தப்பவிடாதீர்கள்'' எனக் கூறினான். சுக்கிரீவனும் அவனைப் பிடித்து வரும்படிக் கட்டளையிடவே வானரர்கள் சுகனைப் பிடித்துக்கொண்டார்கள்.


மறுபடியும் சுகன், ""இராமா, தூதன்ஆக வந்த என்னை மீண்டும் வானரர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். என்னைத் துன்புறுத்துகிறார்களே'' எனக் கூவினான். அதைக்கேட்டுண்டும் இராமர் அவனை விட்டு விடும்படிக் கூறினார்.

இராமர் மூன்று நாள்கள் புல்லணின் மீது படுத்து சமுத்திரராஜனை தியானித்த வண்ணம்  இருந்தார். அப்போது அவன் வராது போகவே இராமர் கோபம் கொண்டு ""இலட்சுணா என் வில்லையும் அம்பையும்கொண்டு வா. இந்த சமுத்திரத்தையே வற்றச் செய்து வானரர்கள் அனைவரையும் இலங்கைக்குப் போக வழி செய்கிறேன்'' எனக் கூறினார்.

இலட்சுமணனும் அவற்றைக் கண்டு வந்து கொடுக்க இராமர் சமுத்திரத்தின் மீது ஓர் அம்பை எய்தார். அது கடலில் விழுந்ததும் கடல் கொந்தளிக்கலாயிற்று. கடலடியிலிருந்த முத்துக்கள், சிப்பிகள், பயங்கரப் பி ராணிகள் முதலியன நீர் மட்டத்திற்கு வரலாயின.

அதே சமயம் இலட்சுமணன் இராமரது கையைப் பற்றி ""போதும் அண்ணா, இனியும் வேண்டாம்'' என்றான். ஆனால், இராமரா அதைக் கேட்கவில்லை. ""இந்த சமுத்திரத்தை பாதாளம்வரை வற்றிப் போகச் செய்கிறேன். கடலிலுள்  உள்ளவற்றை எல்லாம் பொசுக்கி சமுத்திரராஜனை என்ன செய்கிறேன் பார்'' என்று கோபத்தோடு அவர் கூறினார்.

அவர் ஓர் அம்பை எடுத்து பிரம்மாஸ்திர மந்திரத்தைக் கூறி அதை விடுவதற்காக நாணில் ஏற்றினார். அப்போது உலகமே கிடுகிடுத்தது. மலைகள் அதிர நதிகளும், குளங்களும் பொங்கின. சூரியனும், சந்திரனும் கூடத்  தம்போக்கை மாற்றும்படி ஆகியது. புயலும், இடியும் ஏற்பட பல பெரும் மரங்கள் அடியோடு சாய்ந்தன. இதற்குள் சமுத்திரத்தின் நீர் வற்றிக்கொண்டே போகலாயிற்று.


சமுத்திரராஜன் கடலின் மத்தியில் இ ருந்து அலறியடித்துக் கொண்டுவந்தான். அவன் உடல் காந்திமயமாக
இருந்தது. ஆபரணங்களையும், பட்டு புடைகளையும் தரித்த அவன் மரவுரிதரித்த இராமரை வணங்கி ""இராமரே,
கடலின் தன்மை ஆழமாக இருப்பதே. அதனால்தான் எனக்கு பெருமை. அது போய்விட்டால் எனக்கு மதிப்பு ஏது? எனவே வானரர்கள் இலங்கைக்குப் க பாலம் அமைக்கட்டும். அந்த வேலை நடக்கும்போது அவர்களுக்கு
எவ்வித இன்னலும் நேராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்'' எனக் றினான்.

அதைக் கேட்ட இராமர் ""இந்தநாணணேற்றிய அஸ்திரத்தை எங்கேவிடுவது? இதற்கு நீதான் பொறுப்பு'' எனவே சமுத்திரராஜனும், ""வடக்கு பகுதியில் துருமகுல்யமென்னும்அழகிய பிரதேசம் உள்ளது. அங்கு பலபயங்கரத் திருடர்கள் ஒளிந்து மறைந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை  இது அழிக்கட்டும்'' என்றான்.

இராமரும் சமுத்திரராஜன் கூறிய திசையில் அந்த அம்பை எய்தார். அது மின்னலைப்போல் பாய்ந்து இடிபோல கர்ஜித்து அப்பகுதியில் விழுந்து  அதனைப் பொட்டலாக்கியது. அது பூமியில் குத்திய இடத்திலிருந்து நீர் ஊற்று கிளம்பி வற்றாத ஊற்றாக இருந்தது. துருமகுல்யத்திலிருந்த  திருடர்கள் அழிந்தனர். அப்போது சமுத்திரராஜன் "இராமரே, உமது படையில் நளன் என்பவன் இருக்கிறான். அவன் விசுவர்மாவின் மகன் கட்டடக் கலையில் தேர்ந்தவன். அவனைக் கொண்டு பாலத்தை அமைக்கச் செய்யுங்கள். அதற்கு எவ்வித கெடுதலும் வராதபடி நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றான்.

இவ்விதம் கூறிவிட்டு சமுத்திர ன்னன் மறைந்து விட்டான். அதன் பிறகு இராமன் நளனிடம் இது குறித்து அவன் கருத்து என்னவென்றும், அவனால் கண்டிப்பாக அவ்வாறு செய்ய முடியுமா என்றும், கடலின் மீது அவனால் பாலம் கட்ட முடியுமா ன்றும் கேட்டார். இதைக் கேட்ட நளனும், ""சமுத்திரராஜன் கூறியது  உண்மையே. என்னால் பாலத்தைக் கட்ட முடியும். நானே அவ்வாறுதான் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், என்னைப்பற்றி நானே கூறிக்கொள்வதை விட வேறு யாராவது சொல்லட்டும் என்றே இருந்தேன். அதனால்தான் நானாக உங்கள் முன்னால் வரவில்லை. நீங்கள் னுமதி அளித்தீர்கள் என்றால் இன்றே கூட வானரர்கள் ஒன்று கூடி பாலத்தை நிர்மாணிக்கும் வேலை ஆரம்பிக்கலாம்'' என்று இராமரிடம் மிகவும் பணிவோடு கூறினான்.

0 comments:

Post a Comment

Flag Counter